சனி, 5 ஜூன், 2010

ஸ்ரீ தத்தாத்ரேய பாவனி

ஜய யோகீஸ்வர தத்த தயாளா,
ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா
அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய்,
ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்
பிரம்மா, ஹரிஹரரின் அவதாரம்,
சரணாகதர்களின் பிரணாதாரம்
அந்தர்யாமி,சத்சித் ஆனந்தன்,
பிரசன்ன சத்குரு இருதோளுடையன்
அன்னபூரணி யை தோளில் வைத்தாய்,
சாந்தி கமண்டலம் கரமேந்தினாய்
நாலு,ஆறு பல தோளுடையான்,
அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்
நின்சரண் புகுந்தேன் அறியாமூடன்,
வாரும் திகம்பரா ! போகுதே பிராணன்
அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே,
அக்கணமே பிரசன்னம் ஆனாயே
அளவிலா ஆனந்தம்.சித்தி அளித்தாய்,
முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய்
இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்?
உனையன்றி எனக்கில்லை புகலிடம்
விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய்,
அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய்
ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே,
தயை புரிந்தாய் நீ அமரருக்கே
மாயை பரப்பி திதிசுதனை,
இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய்
அளவிலா லீலைகள் புரிந்தாயே,
அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே
நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய்,
மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய்
சாத்யதேவ,யது,பிரஹ்லாத,பரசுராமருக்கே,
போதித்தாய் நீ ஞானோபதேசமே
அளவிலா ஆருள் ஆற்றல் உடையோனே,
என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே
உன் தரிசனம் காணாமல் நானுமே,
இறுதி காணேன்,வாரீர் இக்கணமே
த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே,
பிறந்தாய் நீ அவளின் மகனாகவே
ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே,
படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே
வயிற்று வலியில் துடித்த அந்தணனை காத்தாயே
வல்லபேசனை கயவ காலனிடமிருந்து காத்தாயே
என்னைப்பற்றிய அக்கறை உனக்கில்லையே,
என்னை நினைப்பாய் ஒரு முறையேனுமே
தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம்,
என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம்
முதிய மலட்டு பெண்ணின் கனவினையே,
சேய் அளித்து பூர்த்தி செய்தாயே
அந்தனின் வெண்குஷ்டம் நீக்கினாயே,
அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே
மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய்,
அந்தணனின் தரித்திரம் போக்கினாய்
அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய்,
அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய்
பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய்,
தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்
கொடூர முன்வினையைப் போக்கினாய்,
கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய்
மதோன்மத் புலையனிடம் தோற்றனரே,
பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே
பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே,
ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே
ஒரே நேரத்தில் எடுத்தாய் எட்டு ரூபங்களே,
உருவமற்றும் பலரூபமுடையவனே
தரிசனம் பெற்று தன்யமானரே,
ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே
யவனராஜன் வேதனை நீக்கினாயே,
ஜாதிமத பேதம் உனக்கில்லையே
ராம கிருஷ்ண அவதாரங்களிலே,
நீ செய்த லீலைகள் கணக்கில்லையே
கல்,கணிகை,வேடம்,பசு,பட்சியுமே.
உன்னருளால் முக்தி அடைந்தனரே
நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே,
உன் நாமம் நல்காத நன்மையில்லையே
தீவினை,பிணி துன்பம் தொலையுமே,
சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே
பில்லி, வசிய தந்திரம் இம்சிக்காதே,
ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே
பூத,சூனிய,ஜந்து அசுரர்,ஓடிடுமே,
தத்தர் குண மஹிமை கேட்டதுமே
தத்தர் புகழ் பாடும் தத்த பவானியையே,
தூபமேற்றி தினம் பாடுபவனுமே
இரு லோகத்திலும் நன்மை பெறுவானே,
சோகம் என்பதை அறியானே
யோக சித்தி அவன் அடிமையாகுமே,
துக்க தரித்திரம் தொலைந்திடுமே
ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே,
தத்த பவானி அன்புடன் படித்தாலே
நிதமும் பக்தியுடன் படித்தாலுமே,
நெருங்கான் அருகில் காலனுமே
அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே,
தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே
ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே,
தத்த திகம்பரா நீ தான் இறைவனே
வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே,
வேதம் பிறந்தது உன் மூச்சினிலே
சேஷனும் வர்ணித்து களைப்பானே,
பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே
நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே,
உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே
தவசி தத்வமசிஅவன் இறைவனே,
பாடு மனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே
பாவனி - ஐம்பத்திரு பாட்டு வரிகள்
ஸ்மர்த்துகாமி - ஸ்மரித்தவுடன் ஓடி வருபவர்
திதிசுதன் ராக்ஷஸன்
அர்ஜுனன் - ஸஹஸ்ரார்ஜுனன்
த்விஜ - இருமுறை பிறவி எடுத்த அந்தண வைசிய
க்ஷத்திரிய குலத்தோர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக