வியாழன், 6 அக்டோபர், 2011

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்

"ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்"



ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்:
சாயி நாதர் திருவடியே!
சங்கடம் தீர்க்கும் திருவடியே!
நேயம் மிகுந்த திருவடியே!
நினைத்தளிக்கும் திருவடியே!
தெய்வ பாபா திருவடியே!
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!

"ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"

சனி, 18 ஜூன், 2011

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்:
சாயி நாதர் திருவடியே!
சங்கடம் தீர்க்கும் திருவடியே!
நேயம் மிகுந்த திருவடியே!
நினைத்தளிக்கும் திருவடியே!
தெய்வ பாபா திருவடியே!
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.

"ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"

ஷிர்டி சாய் பாபா வரலாறு

Shirdi Sai Baba Life History- ஷிர்டி சாய் பாபா வரலாறு


ஷிர்டி சாய் பாபா வரலாறு
http://www.saibabaofindia.com/images/shirdiblink.gif

thanks to :http://books.sharedaa.com/2009/01/shirdi-sai-baba-life-history-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE.html



Download
OR
Download


புதன், 3 நவம்பர், 2010

Allah malik hai

Allah malik hai

Allah malik hai!" – "God is great!"

படங்கள்


புதன், 11 ஆகஸ்ட், 2010

பக்த கவான்கரும் சாயி பாபாவும்

Devotee In Contact With Baba-Keshava Gawankar.

அன்பானவர்களே, இன்று பாபாவின் தினம். நான் ஒருவரைப் பற்றி எழுத நினைத்தும் பாபாவின் அனுமதி கிடைக்காததினால் இன்றுவரை எழுத முடியாமல் போய் விட்டது. இன்று பாபாவுடன் மிக நெருக்கமாக இருந்த கேசவ கவாங்கர் என்பவரது அனுபவத்தை எழுதுகிறேன். அவர் தன்னுடைய பெற்றோர்களுடன் மும்பையில் வசித்து வந்தவர்.
Unique relation of Sai Baba and His Bhakt Gawankar.

பக்த கவான்கரும் சாயி பாபாவும்

அவருக்கு அப்போது ஏழு வயது. ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து நிற்காமல் இருந்தது. என்ன மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. மார்பில் கடுமையான சளி இருந்தது. கவாங்கருடைய வீட்டுக்கு அருகில் வழகறிஞ்சரான மற்றொரு கவாங்கர் என்பவர் இருந்தார். அவர் கேசவ கவாங்கருடைய பெற்றோர்களிடம் பாபாவை ஒரு முறை வேண்டிக் கொள்ளுமாறு கூறினார். ஆகவே அந்த வீட்டில் இருந்த அத்தையும் குழந்தை குணம் அடைந்து விட்டால் சீரடிக்கு அழைத்து வருவதாகவும், பேடாவும் (இனிப்பு பண்டம்) கொண்டு வருவதாகவும் வேண்டிக் கொண்டாள். அன்று மாலையில் இருந்தே ஜுரம் குறையத் துவங்கியது. மறுநாள் காலை ஜுரம் குறைந்து விட்டது. மேலும் தொப்பிளுக்கு மேலே, மார்பில் சிறு ஓடைப் போல இருந்தது. அதில் இருந்து சளி வெளியே வந்து கொண்டு இருந்தது. மருத்துவரை உடனே அழைத்தனர். வந்து பார்த்தவர் அதிசயித்தார். இனி ஒன்றும் செய்ய இயலாது என கை விட்டுவிட்ட நோயாளிக்கு எப்படி இந்த மாதிரியாக குணம் அடைய வழி வந்தது? வேறு மருந்து கொடுத்துவிட்டு சென்றார். பையன் பூரண குணம் அடைந்தான்.
கேசவ கவாங்கர்
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. 1918 ஆம் ஆண்டு கேசவாவுக்கு பன்னிரண்டு வயதாயிற்று. அவனுடைய பெற்றோரும் அத்தையும் பீடாவை வங்கிக் கொண்டு சீரடிக்குச் சென்றனர். பாபாவிடம் பேடாவைக் கொடுத்ததும் அவர் அவர்களுக்கு ஆறு பேடாவை மட்டும் கொடுத்துவிட்டு மீதி அத்தனையும் சாப்பிட்டுவிட்டார். அருகில் இருந்த சாமா என்ன பாபா அத்தனையும் சப்பிட்டு விட்டீர்களே எனக் கேட்க பாபா கூறினார், அவர்கள் என்னை ஐந்து வருடங்களாக பட்டினியாக வைத்திருந்தார்களே, அதனால்தான்சப்பிட்டு விட்டேன் என்றார். அதன் பிறகு கேசவை அருகில் அழைத்து முதுகை தடவி விட்டார். இரண்டு அணா தட்சணைக் கேட்டார். கேசவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த சாமா கூறினார், 'சரி நான் தந்துவிட்டேன் பாபா என்று கூறு அது போதும்' என்றார். அவனும் கூற பாபா உடனேயே தன்னுடைய காபினி ஒன்றை அவனுக்கு பரிசாகத் தந்தார். சாமா பாபாவிடம் ' பாபா எவன் சிறுவன். அதை நான் பத்திரமாக வைத்து இருந்து அவன் பெரியவனாக ஆனதும் தருகிறேன் 'என்று கூற பாபா சம்மதித்தார் .
பாபா தந்த காபினி
அனைவரும் நமஸ்கரித்துவிட்டு பாபாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அப்போது பாபா கேசவை தன் அருகில் இழுத்து தன் பக்கத்தில் அமரச் சொல்லி அவன் கன்னத்தில் தட்டினார். கேசவாவுக்கு மயக்கம் வந்தது. தான் நட்சத்திரக் கூட்டத்தில் மிதப்பதை உணர்ந்தார். அவனுடைய உடம்பு ஆடிக்கொண்டே இருந்தது. அது சில மணி நேரம் நீடித்தது. அதன் பின் பாபா அவன் தலை மயிரை கொத்தாகப் பிடித்து அவனை எழுப்ப தன் நினைவுக்கு வந்தவன் பாபாவை நமஸ்கரித்தான். பாபா அவனுக்கு உடியை அவன் நெற்றியில் தடவி கையிலும் தந்த பின் ''ஜோ பீட்டா அல்லா பலா கரேகா' ' ( போ மகனே, போ , அல்லா உனக்கு நல்லது செய்வார்) என்று கூறி அனுப்பினார்.
அப்போது 1914 ஆம் ஆண்டு பாபாவுக்கு இரண்டு ரூபாயை தட்சிணயாகத் தந்த 'திரியம்பக் விட்டல் குரு' என்பவர் அங்கு வர பாபா அவரிடம் தான் அவரிடம் தன்னுடைய ஒரு மகனை ( கேசவ் ) அனுப்புவதாகக் கூறினார்.
அவருடைய மேற்பார்வையில் கேசவ் ஆன்மீக புத்தகங்கள் போன்றவற்றை படித்தாலும் பல்கலை கழகத்தில் படித்து ஒரு மருத்துவராக மாறி பாபாவின் தீவிரமான பக்தராக மாறினார். ராம நவமி மற்றும் விஜய தசமியை தன்னால் முடிந்த அளவு மும்பையில் விமர்சையாகக் கொண்டாடி அன்னதானங்கள் செய்து வந்தார். 1939 ஆம் ஆண்டு பாபா அவர் கனவில் தோன்றி பிட்சை எடுத்து பாக்கார் செய்து ( ஒரு வகை இனிப்புப் பண்டம் ) தானம் கொடு என்றார்.
இனிப்புப் பண்டம் -பாக்கார்
அவரும் பாபா கூறியபடியே பிட்சை எடுக்க மிக அதிக அளவு பிட்சை கிடைத்தது. அதைக் கொண்டு பாக்கரை செய்து 200 -300 பக்தர்களுக்கு கொடுத்தார். நேவித்தியமாக பாபாவின் படத்தின் முன் வைத்த அந்த இனிப்பு பாகார் சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆயும் எந்த சேதமும் அடையவில்லை, துர்நாற்றமும் இல்லை, எறும்புகளும் அதை அண்டவில்லை என்பது அதிசயம்.

அல்லா அனைத்தையும் சரி செய்வார்

votee In Contact With Baba-Laxmanrao Kulkarni Ratnaparkhi.



லஷ்மண் ராவ் குல்கர்னி ரத்னபார்கே என்பவர் மாதவ தேஷ்பாண்டேயின் மாமன். அவர் சீரடியிலே வசித்து வந்தவர். பிறப்பால் பிராமணர். அதிக அளவில் சூத்திரம் பிராமணன் என்ற ஜாதி பேதம் பார்த்தவர். அவரை லஷ்மண் மாமா என்றே அழைப்பார்கள். அவர் சீரடி கிராமத்தின் கிராம அதிகாரி. பலரும் பாபாவிடம் பக்தி கொண்டு இருந்தாலும் அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஜாதி பேதம் காரணமாக அவரிடம் செல்ல பிடிக்கவும் இல்லை.

அறிவில்லாதவர்கள் தன் மமதயினால் அழிவை சந்திப்பார்கள். அவர்கள் கடவுளிடம் இருந்து தக்க தண்டனைப் பெற்று திருந்துவார்கள். அப்போது அவர்களுக்கு கடவுளின் அனுகிரகம் கிடைக்கும். அதுவேதான் லஷ்மண் ராவ் விஷயத்திலும் நடந்தது. அவர் இனம் புரியாத வியாதியினால் பிடிக்கப் பட்டார். என்ன வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்பதினால் வேறு வழி இன்றி மசூதியில் இருந்த பாபாவிடம் வந்தார்.

அவரைக் கண்ட பாபா அவரைக் கருணையோடு நோக்கினார். உடம்பைத் தடவிக் கொடுத்தார். ' போ..போ அல்லா அனைத்தையும் சரி செய்து விடுவார் ' என்றார். அன்றில் இருந்து லஷ்மண் ராவ் முற்றிலும் மாறினார். பாபாவின் தீவீர பக்தரானார். வியாதி குணமாயிற்று. அவரை சோதனை செய்ய விரும்பினார் பாபா .

பாபாஜி என்பவர் லஷ்மண் ராவுடைய ஒரே மகன். அவருக்கும் தீராத வியாதி வர, மருத்துவத்தை மட்டுமே நம்பாத லஷ்மண் ராவ் தினமும் மசூதிக்கு வந்து பாபாவின் கையால் விபூதியை பெற்றுக் கொண்டு சென்று அதை தன்னுடைய மகனுக்கு தடவுவார். ஒரு நாள் அவருடைய மகன் சாகக் கிடந்தார். வியாதி குணம் ஆகவில்லை. லஷ்மண் ராவ் மசூதிக்கு ஓடி வந்து பாபாவின் கால்களில் விழுந்து 'பாபா , பாபா என் மகனை காப்பாற்று' என லஷ்மண் ராவ் கதறினார் .

பாபா அவரை கண்டபடி திட்டிவிட்டு, இங்கிருந்து ஓடிப் போ எனக் கத்தினார். லஷ்மண் ராவிற்கு ஒன்றும் புரியவில்லை. முழு நம்பிக்கையோடு வந்தாரோ இல்லையோ, தெரியாது, ஏன் எனில் பிறவிக் குணமான தலை கனம் அத்தனை விரைவாக முற்றிலும் அழிந்து விடுமா என்ன? மனதில் துயரத்தோடு வீடு திரும்பினார். சிறிது நேரம் சென்றது. பாபா மசூதியில் இருந்து வெளியில் வந்தார். லஷ்மண் ராவ் வீட்டிற்க்குச் சென்றார். பாபாஜியின் தலையை தடவித் தர அவர் உடனேயே சற்று குணம் அடையத் துவங்கினார்.

அதன்
பின் பூரண குணம் அடைந்து விட்டார். அப்போது லஷ்மண் ராவ் பாபா உண்மையாகக் கடவுளே என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டார்.

தினமும் காலை எழுந்து குளித்துவிட்டு சந்தியாவந்தனம் செய்த பின் பாபாவிடம் சென்று அவரை நமஸ்கரிப்பார். கால்களை அலம்பி விடுவார். சந்தனம் இட்டு, மலர்களை வைத்து தூப தீபாராதனை செய்வார். அதன் பின் அவரைசாஷ்டாங்கமாக வணங்குவார். வெளியில் வந்து பிரசாதம் தருவார். அதன் பின்னரே கிராமத்திற்கு சென்று மற்ற கடவுட்களுக்கு பூஜைகளை செய்வார்.

பாபாவின் நெருங்கிய பக்தர் மேகாவின் மரணத்தின் பின் பாபுசாஹெப் ஜோக் என்பவரே பாபாவுக்கு பூஜைகளை செய்வார். 1918 ஆம் ஆண்டு அக்டோபர் பதினைந்தாம் தேதியன்று பாபா மஹா நிர்வாணம் அடைந்தார். அன்று இரவு பாபா லஷ்மண் ராவ் கனவில் தோன்றி இன்று பாபு சாஹேப் ஜோக் ஆரத்தி எடுக்க வரமாட்டார். நான் மரணம் அடைந்து விட்டதாக அவர் நினைகின்றார். ஆனால் நான் மரணம் அடையவில்லை. ஆகவே நீ வந்து காகாட ஆரத்தி எடு என்றார்.

அன்று அங்கு அல்லோலமாக இருந்தது. அனைவரும் தீராத துயரத்தில் இருந்தனர். இரவில் மசூதியில் பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. மறு நாள் அது புட்டி வாடா என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. ஆகவே அதற்க்கு முன் பாபா கூறியபடி ஆரத்தி எடுக்க வேண்டும் என எண்ணிய லஷ்மண் ராவ் அனைத்து சாமான்களையும் எடுத்துச் சென்றா. பாபாவை வணங்கினார்.

அவர் முகத்தை மூடி இருந்த துணியை விளக்கினார். பூஜை செய்தார். அப்போது பாபாவின் கைகள் சிறிது அசைந்ததைப் பலரும் பார்த்தனர். லஷ்மண் ராவ் கண்களில் நீர் நிறைந்தது. உடல் நடுங்கியது. பாபாவிவின் மூடி இருத்த கைகளைத் திறந்து விதா தட்சணையை வைத்தார். துணியால் மீண்டும் முகத்தை மூடிவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

அன்று மதியம் புட்டி வாடாவில் பாபுசாஹெப் ஜோக் பாபாவின் உடலுக்கு மதியான ஆரத்தி எடுத்தார். பாபா எந்த அளவு லஷ்மண் ராவ் மீது அன்பு வைத்து இருந்தார் என்பது எத்தன மூலம் தெரியும் . லஷ்மண் ராவ் மறைந்த பின் அவருடைய மகன் வதந்தர் குல்கர்னி என்பவர் கிராம அதிகாரியானார். பாபாவின் மறைவுக்கு முன் பாபாவுடன் சுமார் பன்னிரண்டு வருட காலம் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.